Post Office சேமிப்பு திட்டம் – குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுக்கு இரட்டிப்பு தொகை!

0
Post Office சேமிப்பு திட்டம் - குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுக்கு இரட்டிப்பு தொகை!
Post Office சேமிப்பு திட்டம் - குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுக்கு இரட்டிப்பு தொகை!
Post Office சேமிப்பு திட்டம் – குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுக்கு இரட்டிப்பு தொகை!

இந்தியாவில் செயல்பட்டு வரும் அஞ்சலகங்களில் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம் நடைமுறையில் உள்ளது. முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கும் இந்த திட்டம் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரம் திட்டம்:

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள இந்த கிசான் விகாஸ் பத்திரம் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபத்தை தரும் ஒரு திட்டமாகும்.

பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை அறிவிப்பு!

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.1000 முதல் சேமிக்க முடியும். இதில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகையானது 10 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு பிறகு இரட்டிப்பாகும் என கூறப்படுகிறது. கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்திற்கு அஞ்சலகத்தில் 6.8% வட்டி வழங்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன்கள் இதில் இணைய தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு வங்கி கணக்கு அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அதிகாரிகளின் அலட்சியத்தால் தாமதம்!

இந்த திட்டத்தில் இணைவதற்கு அருகில் உள்ள அஞ்சலகத்தில் அடையாள ஆவணம் மற்றும் முகவரி குறித்த விவரங்களை வழங்குவதன் மூலம் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இந்த சேமிப்பு கணக்கு தொடங்கியதும் அதற்கான பாஸ் புக் வழங்கப்படும். சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர் எதிர்பாராத விதத்தில் மாற்றமடையும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினியிடம் முதிற்சி தொகையானது வழங்கப்படும். திட்டம் தொடங்கி 30 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் அவசர தேவைக்காக முதலீட்டாளர் பணத்தை எடுக்க விரும்பினால் எடுத்துக்கொள்ள முடியும். இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி மேலும் சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!