தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அதிகாரிகளின் அலட்சியத்தால் தாமதம்!
முன்பெல்லாம் ரேஷன் கார்டு விண்ணப்பித்த பிறகு அதனை பெற பல வழிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு பெற முடியும், ஆனால் அதிகாரியின் அலட்சியத்தால் மிகவும் தாமதம் ஆகின்றன.
புதிய ரேஷன் கார்டு
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி , உணவு வழங்கல் துறை அதிகாரியால் வழங்கப்படுகிறது. புதிய ரேஷன் கார்டை பெற விரும்புவோர் www.tnpds.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். அதில் ‘ஆதார் எண்’ உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் விண்ணப்பதாரின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு என்று தனி சமையல் அறை உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்ட பிறகு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
TNPSC துறைத்தேர்வர்கள் கவனத்திற்கு – கணினி வழி தேர்வு! ஆதார் எண் கட்டாயம்!
இவ்வாறு 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். இதற்கு முன் ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என்ற பல வழிமுறைகளை கொண்டு இருந்தது. அதனால் புதிய ரேஷன் கார்டு பெற 60 நாட்கள் கூட ஆகிவிடும். ஆனால் தற்பொழுது அதிகாரிகள் விண்ணப்பதாரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யவும், அந்த ஆய்வை பரிந்துரை செய்யவும் அலட்சியம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
இதனால் ரேஷன் கார்டு கிடைப்பதில் கால தாமதம் ஆவதால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியவில்லை என்று சாதாரண மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து உணவுத்துறை அதிகாரி கூறுகையில் “ரேஷன் கார்டை வழங்குவதில் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலங்கள் பற்றி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.