Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ‘பான்’ எண் பதிவேற்றுவத்தில் கவனம்!
தமிழகத்தில் தபால் நிலையங்களில் அதிகமானோர் கணக்கு தொடங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர் கணக்குகளில் பான் கார்டு மற்றும் தொலைபேசி எண் இணைப்பு பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடர்பாக வாடிக்கையாளர் சார்பில் ஒரு புகார் எழுந்துள்ளது.
அஞ்சல் பணியாளர்களுக்கு அறிவுரை:
தமிழகத்தில் அஞ்சல் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் பொது மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் அதிக பாதுகாப்பு மற்றும் குறைவான ரிஸ்க் உள்ளதால் அஞ்சல் நிலையங்களில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகம் தான். மேலும் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்கு பான் கார்டு மற்றும் மொபைல் எண் வாடிக்கையாளர்கள் கணக்குகளில் இணைக்கப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கான வழிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!
அந்த வகையில் அஞ்சல் நிலையங்களில், அஞ்சல் பணியாளர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கணக்குகளில் பான் கார்டு மற்றும் மொபைல் எண் இணைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர் சார்பில் ஒரு புகார் எழுந்துள்ளது என்னவென்றால் பான் கார்டு எண் அஞ்சல் பணியாளர்களால் தவறாக பதிவேற்றம் செய்யப்படுவதாக கூறுகின்றனர். இந்த வகையில் பான் கார்டு எண் தவறாக இருப்பதால், டி.டி.எஸ் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் போது, வருமான வரி அறிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – பிப்.12 விண்ணப்பிக்க கடைசி தேதி!
இதையடுத்து தேசிய பங்கு பத்திரங்கள் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) வலைதளம் வழங்கும் பான் கார்டு சரிபார்க்கும் சேவையை பயன்படுத்தும் வகையில், அஞ்சல் துறை கோர் பேங்கிங் சொல்யூசன், என்.எஸ்.டி.எல் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் புகார்களை கருத்தில் கொண்டு பான் கார்டு எண்ணை ‘ஆன்லைன்’ மூலம் எளிதாக சரிபார்க்கலாம் மற்றும் பான் கார்டு எண்ணை அஞ்சல் பணியாளர்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என போஸ்ட் ஆபீஸ் அறிவுறுத்தியுள்ளது.