Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இணைந்து பணம் சேமிக்க குடிமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், தபால் துறை சார்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் அந்த குறைகளையும் கேட்டறிய ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post Office சேமிப்பு கணக்கு
இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல சிறப்பான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறது. வங்கிகளில் பணம் சேமிப்பதை விட இது போன்ற அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களில் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது இந்திய அஞ்சல் துறையில் சுகன்யா யோஜனா திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஐந்து வருட கால சேமிப்பு திட்டம் என பல வகையான சிறப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – உணவு வழங்கல் துறையின் திட்டம்!
அவ்வப்போது தபால் துறையில் ஏதேனும் குறைகள் இருந்தால் கேட்டறியப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஏதேனும் கணக்கு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அதனை கேட்டறிய நேரடியாக அஞ்சல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இந்திய அஞ்சல் துறை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பயனாளர்கள் இலவச அஞ்சல் சேவை எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த தபால்துறை பயனாளர்கள் பயன் பெறுவதற்காக ஐ.வி.ஆர்., என்கிற சேவையை இந்திய அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் அஞ்சல் சேவையின் இலவச எண்ணான ‘18002666868’ என்கிற நம்பரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு தபால்துறை சார்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டறிந்து கொள்ளலாம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.