தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – உணவு வழங்கல் துறையின் திட்டம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகளை அவர்களின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். அதனைக் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதை உடனே பாருங்கள்!
இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனையடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் படிவங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
Exams Daily Mobile App Download
தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகளை அவர்களின் வீடுகளுக்கு தபாலில் அனுப்ப உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை தவிர்க்கவே, பயனாளிகளின் முகவரிக்கு, புதிய ரேஷன் கார்டு தபாலில் அனுப்பப்பட உள்ளது என்று கூட்டுறவுத் துறை அதிகாரி கூறுகிறார். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒருவருக்கு தபாலில் அனுப்ப, எவ்வளவு செலவாகும் உள்ளிட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஒப்புதல் கிடைத்தவுடன் ரேஷன் கார்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.