Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கும் அஞ்சல் துறை!

0
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கும் அஞ்சல் துறை!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கும் அஞ்சல் துறை!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கும் அஞ்சல் துறை!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகைகளில் மோசடிகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை எச்சரித்து அறிவிப்பு ஒன்றை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. ஏனெனில் இதில் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது. இதையடுத்து தற்போது வங்கிகளை போல அஞ்சல் துறையிலும் ஆன்லைன் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் தற்போது மோசடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

ESIC மருத்துவ கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || உடனே விரையுங்கள்..!

அதனால் அஞ்சல் துறை வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களை எச்சரித்து அறிவிப்பு ஒன்றை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியதாவது, இந்திய அஞ்சல் துறையின் பெயரில் மோசடி கும்பல் ஒன்று கிளம்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இது குறித்து தகவல் தொடர்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறியதாவது, இந்திய தபால் துறை சில சர்வே, வினாடி வினா போட்டிகளை நடத்தி வருவதாக தவறான செய்திகள் பரவி வருகிறது.

Exams Daily Mobile App Download

அத்துடன் இதற்கு அரசாங்கம் மானியத் தொகை வழங்கும் என்றும் இந்த தவறான செய்தியை மோசடி கும்பல்கள் வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் வாயிலாகவும் அத்துடன் மெசேஜ் மற்றும் இமெயில் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர். இந்திய அஞ்சல் துறை இது போன்ற மானியத் தொகையை வழங்கவில்லை. மேலும் இதனை வாடிக்கையாளர்கள் நம்பி தங்களின் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வேற யாரிடமும் பகிர வேண்டாம் என்று இந்திய அஞ்சல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த URLகள் அல்லது இணைப்புகள் அல்லது இணையதளங்களை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!