Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன? தவறாமல் படிங்க!

0
Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன? தவறாமல் படிங்க!
Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன? தவறாமல் படிங்க!
Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன? தவறாமல் படிங்க!

இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டுள்ளது. இதன் மூலமாக குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலம் அதிக வட்டியை பெற முடியும். அத்துடன் வரி சலுகைகளும் கிடைக்கிறது.

சேமிப்பு திட்டங்கள்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் . இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை செலுத்துவதால் அதிக வட்டி தொகையை பெற முடியும். இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் குறைந்த முதலீடாக ரூ.1000 வரை கூட செலுத்தலாம். இதன் மூலமாக அதிக வட்டிகளை பெற முடியும்.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், கல்வித்தகுதிகள் & முழு விபரம்!

அதனால் பெரும்பாலான மக்கள் இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கி உள்ளனர். அத்துடன் வரி சலுகைகளையும் பெற முடியும். வங்கி சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டிகளை விட Post office-ல் உள்ள சேமிப்பு கணக்கு மூலமாக கிடைக்கும் வட்டி விகிதம் அதிகமானதாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் Post office-ன் சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளனர். அத்துடன் Post office-ல் 4% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு ஆன்லைன் வாயிலாக தொடங்கலாம் அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை தவிர்ப்போம் – கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு தேவை!

அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் தனி நபர் அடையாளம் மற்றும் வீட்டு முகவரி போன்றவற்றை கண்டறிய இந்த ஆவணங்கள் பயன்படுகிறது. மேலும் வங்கி சேமிப்பு கணக்கில் பெறப்படும் அனைத்து சலுகைகளும் இதில் வழங்கப்படுகிறது. அதாவது டெபிட் கார்டு, செக் புக், ஆன்லைன் பேங்கிங், நெட் பேங்கிங், பணப்பரிவர்தனை போன்றவையும் அஞ்சல் துறையில் வழங்கப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!