TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், கல்வித்தகுதிகள் & முழு விபரம்!
தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் VAO தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறை, கல்விதகுதி குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO தேர்வு முறை:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் துறைகளுக்கு ஏற்ப குரூப் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வகை பதவிகளிலும் ஏற்ப வினாக்கள் வடிவமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது ஒரே ஒரு எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. இத்தேர்விற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பதால் ஏராளமானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை தவிர்ப்போம் – கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு தேவை!
கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக குரூப் 4 தேர்வு நடைபெறவில்லை. குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். ஆனால் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத வயது வரம்பு இல்லை. இத்தேர்வானது மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். பகுதி ‘அ’ மட்டும் ‘ஆ’ என இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
முதல் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். 1 பகுதி ‘ஆ’ வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது முக்கியம், அது தான் உங்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்யும். தற்போது TNPSC வெளியிட்ட தகவலின் படி 2022 மார்ச் மாதம் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.