தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை தவிர்ப்போம் – கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு தேவை!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை தவிர்ப்போம் - கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு தேவை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை தவிர்ப்போம் - கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு தேவை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை தவிர்ப்போம் – கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு தேவை!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலையாக ஓமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. அதனால் வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு மக்கள் அனைவரும் பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் முழு ஊரடங்கை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஊரடங்கை தவிர்ப்போம்:

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தென் ஆப்ரிக்காவில் நவம்பர் மாதம் பரவத் தொடங்கியது. சென்னைக்கு நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவர் மூலம் தமிழ்நாட்டில் ஓமைக்ரான் பரவ தொடங்கியது.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ஜன.3 கடைசி நாள்!

அதிகமாக விமான பயணிகள் மூலமாக ஓமைக்ரான் பரவுவதால் விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு விவர பட்டியலில் மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடத்தில் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகை தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை மற்றும் கர்நாடக போன்ற வெளி மாநிலங்களிலும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் புள்ளி விவர பட்டியலின் படி தமிழகம் ஓமைக்ரான் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது 34 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் கொரோனா வைரஸ் விட அதிகமாக பரவும் தன்மை உடையது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து கோவில் பிரசாதங்களிலும் ஆவின் நெய் – அரசு முக்கிய அறிவிப்பு!

ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பண்டிகை தினங்களை முன்னிட்டு சர்ச்களில் அதிக கூட்டம் போட கூடாது, ரோடுகளில் அதிகம் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ‘பார்ட்டி’கள் நடத்த போலீசார் அனுமதி அளிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் முடக்கப்பட்டது என்பது நாம் அறிந்தவை. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் ஓமைக்ரான் தாக்கம் பெருமளவில் இருக்காது மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!