பணி நேரம் முடிந்து ஊழியர்களை தொடர்பு கொள்ளும் அலுவலர்களுக்கு அபராதம் – அரசு அதிரடி!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் பல்வேறு உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதனை சரி செய்யும் விதமாக புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
அலுவலர்களுக்கு அபராதம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவியது. அதனால் அனைத்து வகையான ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நிலை உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால் முற்றிலும் இல்லாமல் போகவில்லை, இன்னும் சில பகுதிகளில் பரவி கொண்டே தான் இருக்கிறது. அதனால் ஊழியர்கள் இன்னும் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையில் கூடுதல் நேரம் செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாநகராட்சி அறிவிப்பு!
அதனால் அந்த நிலையை சரிசெய்யும் விதமாக போர்ச்சுக்கலில் பணி நேரம் முடிந்த பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்வது சட்டவிரோதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது 8 மணி நேரம் வேலை என்றால் அது ஏட்டளவில் மட்டுமே உள்ளது, நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. வேலை நேரம் முடிந்த பிறகும் அலுவலகங்களில் இருந்து கால் வருவது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இதனை சரி செய்து வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலையை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாளை (நவ.12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
அந்த வகையில் பணி நேரம் முடிந்த பிறகு ஊழியர்களை தொடர்புகொள்ளும் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு எரிபொருள், மின்சாரம், இணையம் என கூடுதலாக வரும் செலவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழங்க வேண்டும் என்று அந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு போர்ச்சுக்களில் ஆட்சியில் உள்ள சோசலிஸ்ட் கட்சி பல்வேறு சிறந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதில்லை.