கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாநகராட்சி அறிவிப்பு!

0
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு - மாநகராட்சி அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு - மாநகராட்சி அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாநகராட்சி அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து காக்கிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் தடுப்பூசி பயன்பட்டால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் நாளை (நவ.12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

அதனால் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் இந்தியாவில் இன்னும் சில பகுதிகளில் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலே உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்தி கொண்டோர் விதம் குறைவாக உள்ளது. இந்த நிலையில் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – டிச.10 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாநகராட்சியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சந்திரபூர் மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, உள்ளிட்ட பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என்று அம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!