முடிவுக்கு வரும் ஜீ தமிழ் “பூவே பூச்சூடவா” சீரியல் – வெளியான தகவல்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளது. அது குறித்த புகைப்படத்தை அந்த சீரியலில் நடிக்கும் ஈஸ்வர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜீ தமிழ்:
தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில சீரியல்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என சொல்லலாம். அந்த வகையில் ஜீ தமிழ் சீரியலில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான “பூவே பூச்சூடவா” சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது 3 ஆண்டுகளாக 1140 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முன்னதாக தினேஷ் என்பவர் நடித்தார். அப்போது ஏராளாமான ரசிகர்கள் இருந்தனர்.
இசை உலக நாயகன் யுவன் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி – கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்!
அதன் பின்னர் அவர் சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகி விட்டார். அதன் பின்னர் வேறு ஒருவர் அந்த சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா, டான்ஸ் நிகிழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகி தற்போது சீரியலில் முக்கிய ரோலில் கலக்கி வருகிறார். அதே சீரியலில் கார்த்திக்கின் தம்பியாக இணைத்து நடிக்கும் மதன் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க உள்ளனர். அந்த சீரியலுக்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் இந்த சீரியல் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் முடிவடைய உள்ளதாக சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, The end is near Poove Poochudava என ஈஸ்வர் ரகுநாதன் பதிவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் முடிவடைய போவதை நினைத்து சீரியல்களின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.