தமிழகத்தில் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம் – விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

0
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம் - விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம் - விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம் – விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது.

சிறப்பு ரயில்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜன. 15ம் தேதி பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட்டப்படும். இப்பண்டிகை ஜன. 14ம் தேதி போகியில் தொடங்கும் பிறகு ஜன. 17ம் தேதி காணும் பொங்கல் வரை பாரம்பரிய முறைகளால் மக்கள் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதன்படி 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜன. 15 ஞாயிற்றுக்கிழமை கொண்டப்படவுள்ளது. இதனையடுத்து ஜன. 14 போகி, ஜன. 15 பொங்கல், ஜன.16 மாட்டு பொங்கல், ஜன. 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்களின் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

வேலை இல்லா பட்டதாரிகளே.. உங்களுக்காக மத்திய அரசின் இலவச பயிற்சி.. Certificate உண்டு.. Job Confirm!

Exams Daily Mobile App Download

இதனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அதன்படி ஜன. 13 அன்று தாம்பரம் – நாகர்கோவில், ஜன. 12 தாம்பரம் – திருநெல்வேலி , ஜன . 17 கொச்சுவேலி – தாம்பரம், ஜன. 16 தாம்பரம் – நெல்லை ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!