தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் – அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை பெற டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் டோக்கன் கிடைக்கப்பெறாதவர்கள் என்ன செய்வது என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெல்லம், பச்சரிசி, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது பரிசு தொகை வழங்குவதற்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி ரேஷன் அட்டைதாரர்கள் ஜனவரி 14-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன், பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் கிடைக்கப்பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் தங்களது கார்டை காண்பித்து பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தொடர் விடுமுறையால் குஷியாகும் மக்கள் – எத்தனை நாட்கள் தெரியுமா?