தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெறாதோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் இந்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து இப்பரிசு தொகுப்பிற்கு டோக்கன் பெறாதவர்கள், இனிமேல் டோக்கன் வாங்கப்போகும் பொதுமக்களுக்கும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் விரைவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது ஓமைக்ரான் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் கூட்டம் கூடாமல் பொதுமக்களுக்கு டோக்கனை முதலிலேயே கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு! ஓமிக்ரான் எதிரொலி!
கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு டோக்கன் முன்கூட்டியே கொடுக்கப்படுவதால் கூட்டம் கூடி நோய்த்தொற்று பரவாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்கும் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில் நாளை முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகிக்க இருப்பதால் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேகமெடுக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!
ஒரு நாளுக்கு 150 முதல் 200 நபர்களுக்கு மட்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் வகையில் அரசு திட்டமிட்டு செயல்பட உள்ளது. நாளை துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன்களில் மக்கள் வாங்கும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், டோக்கன் வாங்க தவறியவர்கள் வருகிற ஜனவரி 10 ஆம் தேதிக்கு மேல் வாங்கும் வகையில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.