பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் – தமிழக அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசின் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது குறித்து அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் போனஸ்:
தமிழக அரசின் துறைகளில் பகுதி நேர பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் உள்ளிட்ட போனஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் எஸ் எஸ் ஏ திட்ட பணிகளில் 2012 ஆம் ஆண்டு 12,000 பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு நியமித்தது. பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இவர்கள், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மொத்தம் 12 அரை நாட்கள் மாதத்திற்கு பணியாற்றுகின்றனர். தற்போது, பத்தாயிரம் ரூபாய் சம்பளம் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு உயர்ந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
அதில், கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கான போனஸ் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான, எந்த நடவடிக்கையையும் பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி அலுவலகமும் மேற்கொள்ளவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் மே மாத விடுமுறை நாட்களில் பணிக்கு வருவதில்லை என்பதால் இவர்களுக்கான மே மாத ஊதியமும் வழங்கப்படுவதில்லை. மற்ற துறை பகுதி நேர ஊழியர்களுக்கு போனஸ் கிடைப்பது போல பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் கிடைக்க வேண்டும். இதற்கான, நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு பொங்கல் போனஸ் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.