இந்தியாவில் ரூ.2000 நோட்டுகள் செல்லும் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!

0
இந்தியாவில் ரூ.2000 நோட்டுகள் செல்லும் - ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!
இந்தியாவில் ரூ.2000 நோட்டுகள் செல்லும் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை 97.38 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் புதிதாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த நோட்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் எனவும், அதை திரும்பி வழங்க வேண்டும் என ஆர்பிஐ அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் ரூ.2000 நோட்டுகள் முழுவதுமாக திரும்பி வழங்கப்படாமல் இருக்கிறது.

அதனால் ரூ.2000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி, ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதே போல டிச. 29 ஆம் தேதி ரூ. 9330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது 97.38 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. அதனால் ரூ. 2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!