அக்.15 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு!
புதுச்சேரியில் செப்டம்பர் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், அக்டோபர் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும், தளர்வுகள் அளிக்கப்பட்டும் வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகமாக உள்ள மாநிலங்களில் கூடுதலாக கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்து செயல்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில், முன்னதாகவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதியான இன்று வரை அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரங்கு அறிவிப்பின் இறுதி நாளான இன்று மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
புதுச்சேரியில் முன்னதாக சுற்றுலா தலங்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு வர இருக்கும் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.