Post Office ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் – வட்டி முதல் ரிட்டன்ஸ் வரை!
போஸ்ட் ஆபீஸ் பொன்மகன் சேமிப்பு திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் குறைந்த அளவு சேமிப்பு தொகையை முதலீடு செய்து சேமித்து வரலாம். இதன் முழு விவரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வட்டி முதல் ரிட்டன்ஸ் வரை:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக POST OFFICE ல் நல்ல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதனால் மக்கள் POST OFFICE திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் ஆண் குழந்தைகளுக்காக உள்ள திட்டம் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகும். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை போலவே ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் இந்த திட்டத்தை எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?
இத்திட்டத்தினை துவங்க குழந்தைகளின் வயது 10 மேல் உள்ளது என்றால் ,அவர்களின் பெயரிலேயே தொடங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் 10 வயதுக்கு கீழ் குழந்தையின் வயது இருந்தால் ஜாய்ண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம். இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்,பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, ஐடி கார்டாக பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் ஆகும். இத்திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கு கணக்கில் முதலீடு மற்றும் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்.5ம் தேதிக்கு மாற்றம் – அரசு அறிவிப்பு!
இந்த கணக்கு தொடங்கியதில் இருந்து 7 வது ஆண்டில் இருந்து கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. அதே போல இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டு தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தை மாதம் 1,000 ரூபாய் வீதம்,வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால் ,வட்டி விகிதம் 7.6%. அடிப்படையில் 15 ஆண்டுகள் முதலீடு செய்யும் போது 1,80,000 ரூபாய் முதலீடு செய்ய முடியும் வட்டி விகிதம் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.