பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்.5ம் தேதிக்கு மாற்றம் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய திறனாய்வுத் தேர்வும் ஒத்தி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்வு தேதி மாற்றம்
இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் – உத்தரவு பிறப்பிப்பு!
அத்துடன் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், நடைபெற இருந்த அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக தற்போது தேசிய திறனாய்வுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பிப்ரவரி 13 வரை முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி நடவடிக்கை!
இதில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 5ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்வு தேதியை மாற்றியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதற்கான நுழைவுச் சீட்டுகளை ஜனவரி 19ம் தேதி பதிவிறக்கம் செய்ய அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டதால் ஜனவரி 25ம் தேதி அன்று பிற்பகல் முதல் பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.