நாடு முழுவதும் பிப்ரவரி 13 வரை முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி நடவடிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் முக்கிய அறிவிப்பை ஒன்றை பிரதமர் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதில் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முதல்வருக்கு முக்கிய கோரிக்கை!
இந்த ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை கொரோனாவை விட மிகவும் வேகமாக பரவிக்கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இங்குள்ள டோக்கியோ உள்ளிட்ட 13 பகுதிகளை வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று கட்டுப்பாட்டின் கீழ் வைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முகக்கவசம் கட்டாயம்! சுகாதாரத்துறை உத்தரவு!
மேலும் இத்திட்டத்திற்கு மருத்துவ நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஜப்பான் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு மாறாக உணவகங்கள், பார்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.