தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முதல்வருக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற அனைவரது கடன்களையும் எந்தவித நிபந்தனைகள் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். தற்போது அரசுக்கு உள்ள நிதி நெருக்கடியில் அனைவரது நகை கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது இயலாத ஒன்றாக இருந்த நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சங்க ஊழியர்கள் நகை கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலூரில் நாளை (ஜன.20) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அப்போது கூட்டுறவு சங்கங்களில் நகை வழங்கியதிலும், பெற்றததிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய அரசு தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் மற்றும் தகுதி அற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில்13,47,33 பேர் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் பட்டியலில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவரது நகை கடன்களையும் தள்ளுபடி செய்யப்படும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தவர்களின் பெயர்கள் நகைக்கடன் தள்ளுபடியில் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் அரசு எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.