மேலூரில் நாளை (ஜன.20) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மேலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளதால் நாளை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த வகையில் மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த அடிப்படையில் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு காரணமாக அதிக மின் விநியோகித்தால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான விபத்துகளை தடுப்பதற்கு தமிழக மின் வாரியம், இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முகக்கவசம் கட்டாயம்! சுகாதாரத்துறை உத்தரவு!
இந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெறும் போது ,மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் நலன் அடிப்படையில் மின்விநியோகம் சில மணி நேரம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும்.இந்த மின்தடை குறித்து முன்னதாகவே செயற்பொறியாளருக்கு அறிவிப்பு தெரிவிக்கப்படும் . அந்த வகையில் மேலூர் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.20) நாளை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் மேலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜன.20) நடைபெறவுள்ளது என மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மு.ராஜா காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே,நாளை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மேலூா் நகராட்சி, பெரிய சூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், தெற்குத்தெரு, டி.வல்லாளபட்டி, திருவாதவூா், பனங்காடி, பதினெட்டாங்குடி, வண்ணாம்பறைப்பட்டி, நாவினிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.