தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முகக்கவசம் கட்டாயம்! சுகாதாரத்துறை உத்தரவு!
தமிழகத்தில் அரசு, தொழிற்சாலை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பணியின் போது முகக்கவசம் அணியாத ஊழியர்களை வெளியேற்றுமாறு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழக பொது சுகாதாரத்துறை அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்கும் வகையில் அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஊழியர்கள் பணிக்கு வரும் போது அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் அவருக்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஒரு வாரங்களில் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என்றும் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நாளை (ஜன.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
பணியிடங்களில் வாய் மற்றும் மூக்கு உள்ளிட்டவைகள் முழுவதும் மூடியபடி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் உடனே வெளியேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்க மேற்பார்வையாளர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணியின் போது ஒவ்வொருவருக்கும் சுமார் 2 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் பணியிடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – கால அவகாசம் நீட்டிப்பு!
அதனை தொடர்ந்து முகக்கவசம் மற்றும் தேவையான இடங்களில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். மேலும் பெரும்பாலான இடங்களில் தற்காலிக கைகழுவும் இடங்கள் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள கேன்டின்களில் ஒரே நேரத்தில் 50% பேருக்கு மட்டும் அனுமதி வழங்குமாறும், உணவு வழங்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பணியாளர்கள் ஒன்றாக கூடும் நிகழ்வுகளை நிர்வாகம் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளிலும் ஊழியர்களுக்கான வாகனங்களில் 50% ஊழியர்களை மட்டும் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.