பாலிடெக்னிக் கல்லூரிகள் இன்று முதல் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு அனுமதி!
ஹரியானா மாநிலத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை தொற்று வெகுவாக குறைந்திருக்கும் சூழலில், கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டுமாக துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கல்லூரிகள் திறப்பு
ஹரியானா மாநிலத்தில் தற்போது அமலில் இருந்து வரும் முழு ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. அதன் படி கல்லூரிகளை திறக்கும் முடிவின் முதல்கட்டமாக 15 நாட்கள் வரை வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – தகுதி, பணியிடம் விளக்கம்!
இது தொடர்பாக கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஹரியானா மாநிலத்தில் கல்லூரிகளை திறக்கும் முடிவு 15 நாட்களுக்கு நீடிக்கும். அந்த வகையில் புதிய உத்தரவானது இது செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 5 மணி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 5 மணி வரை நீடிக்கும். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் போது, முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கூட்ட நெரிசல் தவிர்ப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அம்மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!
அந்த வகையில் குடியுரிமை வசதிகளுடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு, அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, மாணவர்கள் அனைவரும் தங்களது ஆன்லைன் வகுப்புகளை தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அம்மாநிலத்தில் இன்று (செப்டம்பர் 20), 1 முதல் 3 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. என்றாலும் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்படவில்லை.