பாலிடெக்னிக், சென்னை & அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில், சென்னைக்கு அருகே மாண்டஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் பாலிடெக்னிக் தேர்வுகள், சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் ரத்து:
வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாண்டஸ் புயலாக மாறி இருக்கிறது. அதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்று (டிச. 9) பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் முகம் பதித்த நாணயங்கள் வெளியீடு – பிரிட்டனில் புதிய சகாப்தம்!
Follow our Instagram for more Latest Updates
டிசம்பர் 10 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், மழை தாக்கத்தை பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை ( டிச. 10 ) நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.