மன்னர் சார்லஸ் முகம் பதித்த நாணயங்கள் வெளியீடு – பிரிட்டனில் புதிய சகாப்தம்!
கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆண்டு வந்த இளவரசி எலிசபெத் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மகன் சார்லஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றார். தற்போது பிரிட்டனில் சார்லஸ் முகம் பதித்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாணயம் வெளியீடு:
பிரிட்டன் நாட்டு ராணியாக இருந்த எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஸ்காட்லாந்தில் உயிரிழந்தார். ராணியின் மறைவை அடுத்து அவரது மகனான சார்லஸ் புதிய மன்னராக பதவியேற்றார். ராணி உயிரிழந்த 24 மணி நேரத்திக்குள் சார்லஸ் மன்னராகவும் அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Exams Daily Mobile App Download
ராணி இறந்ததையடுத்து தற்போது அந்நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தேசிய கீதம் போன்றவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த நாட்டில் இதுவரை God Save The Queen என்று தொடங்கும் தேசிய கீதம் தற்போது God Save The King என்று மாற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சார்லஸ் முகம் பதித்த நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கியில் விலை தேடுபவர்களின் கவனத்திற்கு – புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ரிஷி சுனக் தலைமையிலான அரசில் பிரிட்டன் அஞ்சலகங்களில் மூன்றாம் சார்லஸ் முகம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மன்னர் சார்லஸின் முகம் பதித்த கரன்சி நோட்டுகளும் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.