தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேர நிர்ணயம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாகி வருகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செப்.6 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கொரோனா காலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு சமூக இடைவெளி, கிருமி நாசினி, முக கவசம் முதலியன கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் போதிய பாதுகாப்புடன் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Google Pay வில் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம் – பயனர்களிடம் வரவேற்பு!
கொரோனா பாதுகாப்பு காரணமாக உள்ளாட்சி தேர்தலானது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின் போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அனுமதி வழங்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.