செப்.6 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று இந்துக்களின் முக்கிய வழிபாட்டு நாளான அமாவாசை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களின் வருகைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்களுக்கு தடை
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் விதிக்கப்பட்டுள்ள கொரோனா பேரலை தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் முதல் கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Google Pay வில் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம் – பயனர்களிடம் வரவேற்பு!
இந்நிலையில், வார இறுதி நாட்களில் மட்டும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களின் வழிபாட்டுக்கு தடை விதித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தகரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. அதனால் செப்டம்பர் 6 ஆம் தேதி கோயிலில் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.