தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – மீறினால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை!

0
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - மீறினால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - மீறினால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – மீறினால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காவல்துறை எச்சரிக்கை:

தமிழக மக்கள் பலரால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இன்னும் தீபாவளிக்கு 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜவுளி வியாபாரமும், பட்டாசு வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அடிக்கடி பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ரோடு சைட் கடை வியாபாரிகள் சிரமத்தில் இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க, தமிழக காவல்துறையினர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை தரக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது என எச்சரித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

சமையல் போட்டிக்கு போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் முல்லை, வீட்டிற்கு வந்த மூர்த்தி குடும்பம் – இன்றைய எபிசோட்!

பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை வெடிக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிக சத்தம் கேட்கும் பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும், பட்டாசு பொருட்களை பேருந்து, ரயில், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் எடுத்து செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளன்று காலை 6 முதல் 7 வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!