12 ஆம் வகுப்பு படித்தவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Peon பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
01.01.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1998 முதல் 01.01.2004 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். கடலூர் – 3, கிருஷ்ணகிரி – 1, மயிலாடுதுறை – 1, நாகப்பட்டினம் -1, நாமக்கல் – 1, சேலம் – 1, திருச்சி – 6 என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதற்கு மேல் அதாவது டிகிரி படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 09.04.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இதை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.