ஆப்கன் தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் – இந்திய தூதரக தாக்கத்திற்கு பிரதமர் கடும் கண்டனம்!

0
ஆப்கன் தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் - இந்திய தூதரக தாக்கத்திற்கு பிரதமர் கடும் கண்டனம்!
ஆப்கன் தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் - இந்திய தூதரக தாக்கத்திற்கு பிரதமர் கடும் கண்டனம்!

ஆப்கன் தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் – இந்திய தூதரக தாக்கத்திற்கு பிரதமர் கடும் கண்டனம்!

குஜராத் மாநிலம், சோமநாத புரத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோயில் புதிதாக கட்டப்பட உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து தலிபான்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கண்டனம்:

ஆப்கானிஸ்தான் தலிபான் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் அந்த விமான நிலையத்தின் நுழைவு வாயில்கள் அனைத்திலும் தலிபான்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் கடைகள், உணவகங்கள் திறந்திருக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

காபூலில் இருந்து புறப்படும் விமானங்களில் வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டது தொடர்ந்து இந்தியாவும் காபூலில் உள்ள தூதரகத்தை மூடியது. அங்கு பணியாற்றிய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் 140 பேர் சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – பொருட்கள் வாங்க முடியாமல் அவதி!

குஜராத் மாநிலம், சோமநாத புரத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோயில் புதிதாக கட்டப்பட உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. அதில் உரையாற்றிய பிரதம நரேந்திர மோடி கூறியதாவது, தீவிரவாதத்தால் மனித குலத்தை அடக்கி ஆள முடியாது. தீவிரவாதத்தை அடிப்படையாக வைத்து ஆட்சி நடத்துபவர்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. நீதி, உண்மையை யாராலும் தோற்கடிக்க முடியாது என அவர் கூறினார். தலிபான்களின் பெயரை குறிப்பிடாமல், தீவிரவாதத்தால் மனித குலத்தை அடக்கி ஆள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!