இரவு 10 மணிக்கு மேல் கடைகள், உணவகங்கள் திறந்திருக்க அனுமதி – அரசு அறிவிப்பு!
தலைநகர் டெல்லியில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை ஆய்வு செய்த அரசு கடைகளின் இயக்க நேரங்களை தளர்த்தியுள்ளது. மேலும் மால்களில் உள்ள கடைகள், உணவகங்கள் இரவு 10 மணிக்கு வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள் அறிவிப்பு
கொரோனா 2 ஆவது அலையால் பெருமளவு பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் டெல்லி யூனியன் பிரதேசம் முதன்மையானதாகும். இதனிடையே நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் தற்போது புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்ட அரசு, தலைநகர் டெல்லியில் புதிய தளர்வுகளை அளித்துள்ளது. அதன் கீழ் கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கையாக, கடைகளுக்கான இரவு 8 மணி நேர கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி & கல்லூரிகள் திறக்க அனுமதி – கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு
வரும் திங்கள் முதல் அமலுக்கு வரும் இந்த தளர்வுகள் வணிக வளாகங்கள் உட்பட அனைத்து கடைகளுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நகரத்தில் உள்ள உணவகங்களும் இனி இரவு 10 மணி வரையும் திறந்திருக்கும். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லியில் இதுவரை கடைகளின் இயக்க நேரம் இரவு 8 மணி வரை கொடுக்கப்பட்டிருந்தது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – பொருட்கள் வாங்க முடியாமல் அவதி!
தற்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இந்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 21) 19 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது கூடுதல் தகவல். டெல்லியில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.