ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – பொருட்கள் வாங்க முடியாமல் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை இயந்திரங்களில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகள் காரணமாக பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடை
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் முறை இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இவற்றில் ஏற்படும் கோளாறுகள் நிமித்தமாக பொருட்களை சரியாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள ஒரு ரேஷன் கடையில் இவ்வகை சிக்கல்கள் அடிக்கடி நிகழுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு – தொழில்துறை ஒதுக்கீடு சேர்க்கை!
அதாவது சின்னாளபட்டியில் உள்ள பூஞ்சோலை, பொம்மையசுவாமி கோயில் தெரு, மேட்டுப்பட்டி, நடுத்தெரு உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து இயந்திர கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் முறையான இணைய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாததால் ரேஷன் பொருட்களை வாங்க வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர பொருட்களை வாங்க வரும் முதியோர்களது கை ரேகை சரியாக பதிவாகாததால் பொருட்களை பெற்றுச்செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால் 200 முதல் 300 நபர்கள் வரை தினசரி பொருட்களை பெறக்கூடிய ரேஷன் கடைகளில், சுமார் 100 முதல் 150 பேர் தான் பெற்று செல்கின்றனர். மேலும் ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களை கருத்தில் கொண்டு அதிவேக இணைய தள வசதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.