ஜன.12 இல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி – பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு!
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் வரும் ஜனவரி 12ம் தேதி மோடி பொங்கல் நிகழ்ச்சி மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்கிறார்.
மோடி பொங்கல்:
தமிழகத்தில் வரும் ஜனவரி 14ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசியல் தலைவர்களால் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 12ம் தேதி ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவிற்கு மாநில அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
ஏனெனில் இந்த மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஜன.12ம் தேதி நடைபெற உள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார் என்றும், நிகழ்ச்சியின் இடையே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்கிறார் என்றும் தகவல் வெளியானது.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – KYC புதுப்பிப்பு! காலக்கெடு நீட்டிப்பு!
இந்நிலையில் மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்குமாறு ஜல்லிக்கட்டு குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் நடக்கவிருந்த நிகழ்சசியை தவிர்த்து மதுரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் முதலமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கலந்து கொள்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.