அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – KYC புதுப்பிப்பு! காலக்கெடு நீட்டிப்பு!
இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கு விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்கள் விவரங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களை வற்புறுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி:
2022ம் ஆண்டு பிறக்க தொடங்கவுள்ள நிலையில் அனைத்து துறைகளும் புதிய விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வங்கி துறையில் பல புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏடிஎம் சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஏடிஎம் பண பரிவர்த்தனைகள் 5 முறை மட்டுமே இலவசமாக செய்ய முடியும். சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனை இலவசமாக செய்ய முடியும். அதன் பின் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரி 3 முதல் 1 – 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
மேலும் ஆன்லைன் வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முயற்சிக்கும் போது தங்களின் கார்டு விவரங்களை பதிவிடுவது அவசியம். பிறகு அடுத்த பணபரி வார்த்தையின் போது தானாகவே கார்டு விவரங்கள் உள்ளிடப்படும் இந்த நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கருதப்பட்டது. எனவே வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை சேமிக்க கூடாது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் முழுக்கரும்பு இல்லை? விவசாயிகள் அதிர்ச்சி!
வணிக நிறுவனங்கள் தரவுகளை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்ற திட்டத்தில் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ஓமிக்ரான் பரவி வரும் சூழலில் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை விவரங்களை புதுப்பிக்க வற்புறுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.