தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் முழுக்கரும்பு இல்லை? விவசாயிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழுக்கரும்பு உட்பட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உள்ள நிலையில் இன்னும் கரும்பு கொள்முதல் செய்யவில்லை. எனவே விரைவில் தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக சென்று அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை:
தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயிகளை போற்றும் வகையில் தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு வருடம்தோரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகின்றன. அந்த அடிப்படையில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முழுக்கரும்பு உட்பட 21 வகையான பொருட்கள் பொங்கல் பரிசாக ஜனவரி 3ம் தேதி வழங்கப்பட உள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? இன்று முக்கிய முடிவு!
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில் இன்னும் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை அதிகாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானாதி ராஜபுரம் கிராமத்தில் 70 ஏக்கர் பரப்பில் கடந்த 100 ஆண்டுகளாக பன்னிர் கரும்பு பயிரிடப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பு மற்றும் மழை காரணமாக கரும்பு விலை குறைந்தது. தமிழக அரசு நேரடியாகவே விவசாயிகளிடம் சென்று அனைத்து கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்பட்டதாக சீர்காழி தாலுக்கா அல்லிவிளாகம், காத்திருப்பு, செம்பிருப்பு, சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.
ஒரே நாளில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மீண்டும் முழு ஊரடங்கு அமல்! தகவல் வெளியீடு!
இந்த ஆண்டு மழை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் அரசு அதிகாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகளை துவங்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இடைத்தரகர்கள் கரும்புகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கு முயற்சி செய்து வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேரடியாக அரசு முழு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.