ஜனவரி 3 முதல் 1 – 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் ஒமிக்ரான் தொற்று அச்சத்திற்கு மத்தியில், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 3 முதல் மீண்டும் தொடங்கும் என்று மாநில பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் சமீர் டாஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளதான ஒமிக்ரான் வைரஸ் மாறுபாடு மீண்டுமாக முழு முடக்கம் என்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்க கூடிய இவ்வகை ஒமிக்ரான் வைரஸால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒடிசா மாநில அரசு, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான நேரடி கற்பித்தல் முறையை மீண்டும் தொடங்குவது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் முழுக்கரும்பு இல்லை? விவசாயிகள் அதிர்ச்சி!
இது குறித்து ஒடிசா அரசு இன்று (டிச.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் ஜனவரி 3 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது பள்ளிகள் திறப்பு குறித்து மாநில பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் சமீர் டாஷ் கூறுகையில், ‘ஒடிஷா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஜனவரி 3 முதல் ஆரம்பமாகும். இருப்பினும் மாணவர்களின் நேரடி வருகை கட்டாயமாக்கப்படவில்லை.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? இன்று முக்கிய முடிவு!
அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். இது தவிர பள்ளிகள் நடைபெறும் நேரங்களில் வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யவும் நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போது மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி கற்பித்தல் முறை மீண்டும் தொடங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.