தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை – அரசின் அதிரடி நடவடிக்கை.. அமைச்சர் உரை!
தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் துறை மீதான மானிய கோரிக்கை இவ்வாறு தான் நடைபெற்று வருகிறது அதில் தேசிய அமைச்சர் தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பிளாஸ்டிக்:
தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பிளாஸ்டிக் அல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு வாரங்களில் உச்சம் தொடும் கொரோனா – பொதுமக்களுக்கு அலர்ட்!
அதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வரும் ஆண்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 1000 குறுங்காடுகள் உருவாக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் 100 ஏக்கர் பரப்பில் மாதிரி காடுகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் 38 மாவட்டங்களிலும் நீர் நிலைகளை தூய்மையாக பராமரிக்கும் 100 பேருக்கு நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download