இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு வாரங்களில் உச்சம் தொடும் கொரோனா – பொதுமக்களுக்கு அலர்ட்!
இந்தியாவில் சமீபத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் என எல். என். ஜே.பி மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல்
நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் டெல்லியில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக மாநில காலநிலை மாற்றம் 2.0 செயல்திட்டம் – சட்டப்பேரவையில் தகவல் வெளியீடு!
மேலும் இது குறித்து டெல்லி எல்.என்.ஜே.பி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் டெல்லியில் 2 ஆயிரம் படுகைகளை கொண்ட பெரிய மருத்துவமனை இருப்பதாகவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிறந்த 18 நாள் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தவிர 4 குழந்தைகள் சிகிச்சையில் இருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் பள்ளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், இன்னும் இரண்டு வாரங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும், அதன் பின் பாதிப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இருந்தாலும் மக்கள் இதை கண்டு அச்சப்பட வேண்டாம் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download