தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இந்த மாதம் முன்கூட்டியே ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி பேருக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்காக கூடுதல் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் மீண்டும் முகாம்கள் அமைக்கப்பட்டு கூடுதல் பணியாளர்களை சேர்க்க திட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி முடிக்கப்பட்டு அதன் பின்னர் படிப்படியாக புதிய பணியாளர்கள் இணைக்கப்படுவார்கள்.