பொங்கல் பரிசாக கூடுதலாக ரூ.250 வழங்க முடிவு – முதல்வர் அறிவிப்பு!!

0
பொங்கல் பரிசாக கூடுதலாக ரூ.250 வழங்க முடிவு

புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே ரூ.500 வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ரூ.250 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 1.86 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், டோக்கன் பெறாதவர்களும் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகையையொட்டி சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக ரூ.500 வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.500 ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மொத்தமாக பொங்கல் பரிசாக ரூ.750 கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!