விஜய் டிவி முன்னணி சீரியலில் களமிறங்கும் “பிக்பாஸ் ராஜு” – வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் ராஜு ஜெயமோகன் தற்போது பிரபலமான சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அது குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் ராஜு:
தமிழ் சின்னத்திரையில் மக்களிடம் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்திகா , மூன்றாவது சீசனில் முகின் , நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் வெற்றிபெற்ற நிலையில் ஐந்தாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதில் விஜய் டிவி சீரியல் நடிகர் ராஜு வெற்றி மகுடத்தை சூடி சென்றார். ராஜு தனது நகைச்சுவை குணத்தால் ஏகப்பட்ட மக்கள் மனதை கவர்ந்து இருக்கிறார்.
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 18 நாட்கள் தான்! முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வந்தார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின் கத்தி கதாபாத்திரம் வெளிநாடு செல்வது போல காட்டப்பட்டு சீரியலில் கதை மாற்றப்பட்டது. அவர் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து டைட்டில் வின்னராக வெளியே வந்த போது அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்கமாட்டேன் என விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் பல பட வாய்ப்புகள் வருவதாக சொல்லி இருந்தார்.
IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறிவைக்கும் 5 வீரர்கள்!
சீரியலில் நடித்ததில் இருந்து அடுத்தகட்டம் போக வேண்டும் என அவர் நினைத்தார். இந்நிலையில் ராஜு தற்போது விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் களமிறங்க இருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த சீரியல் குழுவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அவர் தமிழ் சரஸ்வதி திருமணத்திற்கு வந்திருக்கலாம் என ஒரு சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது.