IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறிவைக்கும் 5 வீரர்கள்!
IPL யின் அனைத்து 10 அணிகளும் நாளை மறுநாள் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் . இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 590 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் முக்கியமான 4 வீரர்களை குறிவைத்துள்ளது.
KKR யின் திட்டம்:
இந்த ஆண்டு 15 வது சீசனுக்கான IPL ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இம்முறை இரண்டு புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்த்து, ஐபிஎல் 2022 யில் மொத்தம் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. போட்டிக்கு முன்னதாக 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது. மும்பை இந்தியன்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், போன்ற அணிகள் 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கல்வி உதவித்தொகை உயர்வு!
இதை தொடர்ந்து BCCI அறிவிப்பின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆண்ட்ரே ரசல் 12 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் 8 கோடிக்கும், வருண் சக்ரவர்த்தி 8 கோடிக்கும், சுனில் நரைன் 6 கோடிக்கும் தக்கவைப்புக்குப் பிறகு மெகா ஆடிஷனுக்காக KKR க்கு 48 கோடி பட்ஜெட் வைத்துள்ளது. கடந்த ஆண்டு IPL தொடர் இறுதி போட்டியில் கொல்கத்தா ,சென்னை அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது. இம்முறை மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்.20 வரை தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய அறிவிப்பு!
மெகா ஏலத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி BCCI வெளியிட்ட இறுதி பட்டியலில் முக்கியமான 4 வீரர்களை குறிவைத்துள்ளது. அதில் ஆண்ட்ரே ரசல் (ரூ 12 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ 8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (ரூ 8 கோடி), சுனில் நரைன் (ரூ 6 கோடி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 வீரர்களும் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 கோடியை அடிப்படை விலையாக கொண்ட இந்திய அணி ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் அதிக தொகைக்கு KKRக்கு ஏலம் போவார் என்று கூறப்படுகிறது.