பிப்.20 வரை தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய அறிவிப்பு!
டோங்கா தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு காரணமாக வரும் பிப்ரவரி 20ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு தனது அதிகாரபூர்வ இணையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா தொற்று நோயின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்குதலின் போது டோங்கா நகரில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது சமீபத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியில் இருந்து பசிபிக் தீவு தேசத்தை மீட்க உதவும் உதவி ஊழியர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தலைநகர் உட்பட நாட்டின் சில பகுதிகளில் பிப்ரவரி 20 வரை டோங்கா ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
கடந்த புதன்கிழமை நிலவரப்படி 35 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்ததாக பிரதமர் அலுவலகம், சியாசி சோவலேனி தெரிவித்துள்ளது. ஜனவரி 15 அன்று ஹங்கா-டோங்கா-ஹுங்கா-ஹா’பாய் எரிமலை வெடித்து, உதவிகள் தொடங்கியதில் இருந்து இதுவரை டோங்காவில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. Nukuʻalofa மற்றும் Vavaʻu மாவட்டத்தை உள்ளடக்கிய Tongatapu தீவில் வசிப்பவர்கள், பொது போக்குவரத்திற்கான அனுமதி இல்லாமல் வீடுகளுக்குள் இருக்க உத்தரவிட்டுள்ளனர். அங்கு நேற்று பிப்ரவரி 9ம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
நாட்டின் இணைய இணைப்பை மீட்டெடுக்க உதவுவதற்காக, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் குழு ஒன்று அந்நிறுவனத்தின் செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்ட ஆண்டெனாக்களை நிறுவ டோங்காவிற்கு வந்துள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணையம் முடக்கப்பட்டு பள்ளிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு முடியும் வரை டோங்கன் கல்வி அமைச்சகம் வானொலி மூலம் பள்ளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் என்று டோங்கன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. டோங்கா தனது 1,07,000 மக்கள்தொகையில் 88 சதவீதத்திற்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.