TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 18 நாட்கள் தான்! முக்கிய அறிவிப்பு!
TNPSC இணையதளத்தில் OTR எனப்படும் நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என தேர்வர்களுக்கு TNPSC அறிவித்துள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அண்மையில் 2022ம் ஆண்டு TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுத கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் நடப்பாண்டு முதல் அனைத்து வித அரசு போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறிவைக்கும் 5 வீரர்கள்!
தமிழ் மொழித் தேர்வில் 40% மதிப்பெண்கள் கட்டாயமாகும் அப்போது தான் மற்ற பாடப்பகுதிகள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மொழி தேர்வு வினாக்கள் 10ம் வகுப்பு தரத்தில் உருவாக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அரசு பணிகளில் 100% பணியமர்த்தும் வகையில் இத்தகைய புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதிய அறிவிப்பாக TNPSC தேர்வு எழுதுபவர்களில் ஒரு முறை நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்.20 வரை தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய அறிவிப்பு!
தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நிரந்தரப் பதிவு கணக்கு மூலமாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 18004190958 எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.