PG TRB போட்டித்தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா பெருந்தொற்று பரவல் எதிரொலி!
ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்த 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் நடந்த திட்டமிட்டிருந்த தேர்வுகளை தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக தள்ளி வைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதி வாரியாக தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு போட்டித்தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் தான் கொரோனா பரவல் நிலைமை சீராகி வந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்? தகவல் வெளியீடு! மத்திய பி.ஐ.பி விளக்கம்!
அந்த அறிக்கையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை – 1 க்கான 2020-21 காலிப்பணியிடங்களுக்கான நியமனத்திற்காக 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட 31.12.2021 நாளிட்ட பத்திரிகைச் செய்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தற்பொழுது பெருந்தொற்று சூழ்நிலை, நிர்வாகக் காரணங்களினால் வரும் 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
தேர்வுக்கான விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும். இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேதிகள் பின்னர் அதிகாரபூர்வ இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்களினால் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நபர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அடிக்கடி சோதித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.