தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!

0
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் – ரேஷன் அட்டைதாரர்கள் ஷாக்!

இதில் குறிப்பாக தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்பதால் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 15 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜனவரி 31 வரை 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!

இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 19ம் தேதி முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!