பெட்ரோல் விலை லிட்டருக்கு 16.02 ரூபாய் குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16.02 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெட்ரோல் விலை:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பெட்ரோல், டீசல் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளதால் இதன் விலை உயர்வை மக்களை அதிக பாதிப்பிற்கு உள்ளாகியது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உரிமம் விட்டுக் கொடுத்தல்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினந்தோறும் அதிகரித்த பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்தை நம்பியிருக்கும் பல நூறு வர்த்தகங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைந்தது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய ஆரம்பித்தது.
தமிழகத்தில் நவ.18 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாபில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16.02 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சாப்பை தொடர்ந்து யூனியன் பிரதேசமான லடாக்கிலும் டீசல் விலை 13.43 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ரூ.13.35 வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உத்திரபிரதேசத்தில் பெட்ரோல் விலை 6.96 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.