தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உரிமம் விட்டுக் கொடுத்தல்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதை வேண்டாம் என நினைப்பவர்கள் உரிமம் விட்டுக்கொடுத்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
உரிமம் விட்டுக்கொடுத்தல் திட்டம்:
பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 8,50,202 குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இவ்வாறு செயல்பாட்டில் இருக்கும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதந்தோறும் தமிழக அரசு வழங்கும் விலை குறைவான பொருட்கள் மற்றும் இலவச பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நவ.18 வரை கனமழை நீடிக்கும் – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை அறிக்கை!
ஆனால் பலர் அதை பயன்படுத்தவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் பொருட்கள் அவ்வப்போது கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே உணவுப் பொருள் கடத்தல், கள்ளச்சந்தை வணிகம் ஆகியவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது மற்றும் கள்ளச்சந்தை வணிகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!
அதை முழுமையாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை தேவைப்படாத குடும்ப அட்டைதாரா்கள் தாமாகவே முன்வந்து கூறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலும், இதற்காக அரசு சார்பில் உருவாக்கப்பட்ட செயலியில் எந்த பொருட்கள் தேவையில்லை என்பதை குறிப்பிட வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். விருப்பமுள்ளவர்கள் தங்களின் குடும்ப அட்டையில் பதிவு செய்த கைபேசி எண்ணை உள்ளீடு செய்து, ஒரு முறை கடவுச்சொல்லை பெற்று அதன்பின் எந்த பொருள் எவ்வளவு நாளைக்கு தேவை இல்லை என்பதை குறிப்பிட வேண்டும்.